mardi 10 mai 2016

கே.பி.பத்மநாதன் மேலதிக விசாரணை

குமரன் பத்மநாதன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை – சட்ட மா அதிபர்:புலிகளின் முன்னாள் சர்வதேச செயற்பாட்டாளரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்ஆஜரான சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கே.பி. தொடர்பில் சட்டரீதியாக செயற்படுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கல் செய்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரித்தி பத்மன்சூரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ம.வி.மு யினரின் மனு மீதான விசாரணை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா என்பதுகுறித்து அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை என மனுதாரர் தரப்பில் ஆஜரானசட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த மனு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire