dimanche 22 mai 2016

இலங்கையில் அனர்த்தங்களுக்குட்பட்டவர்களுக்கு இலங்கையுடன் இணைந்து 144 மில்லியன் உதவி


usaஇலங்கையில் அனர்த்தங்களுக்குட்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் செயலகம் விடுத்துள்ள விசேட அறிவித்தலில், 7.2 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இந்த உதவிப் பொருட்களில் குளிருக்காக அணியும் போர்வைகள், மெத்தைகள் மற்றும் முதலுதவிப் பொருட்கள் என்பன அடங்குவதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.
இது தவிர, இலங்கையுடன் இணைந்து மூன்று வருட அனர்த்த உதவி வழங்கும் திட்டமொன்றை செயற்படுத்துவதற்கும் அமெரிக்க தூதுவராலயம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இதற்காக, 144 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire