vendredi 20 mai 2016

இலங்கையில் காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து

ள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. அத்துடன் 420,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,299,806 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், 610 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 210 என்று அந்த நிலையம் கூறியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire