இராணுவத்தினரின் கவலையை விட என்னுடைய கவலை மிகவும் அதிகமாகும். எதிர்காலத்திலும் பயங்கரவாதம் தொடரக்கூடிய வாய்ப்பினை உருவாக்கவேண்டாமென இராணுவத்தினருக்கு முன்னெச்சரிக்கையாக கூறிவைக்க விரும்புகின்றேன். விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளார்கள் என அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் தற்போது பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பதென பிறநாடுகளுக்கு கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களை நடாத்தி வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாக மூன்றரை ஆண்டுகாலமாக அரசு கூறிவருகிறது. இந்த நாட்டில் எப்பகுதியிலேனும் விடுதலைப்புலிகள் இல்லையென உறுதியாக நம்புகின்றேன். அப்படி ஒருசிலர் தப்பித்தவறி இருப்பின் அவர்களை கணக்கிலெடுக்கத் தேவையில்லை. ஏனெனில் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக ஒரு துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்கவில்லை என்பதுமட்டுமல்ல ஒருவரேனும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததாகவோ, மரணித்ததாகவோ செய்திகள் இல்லை.
ஆனால் விடுதலைப்புலிகளை வேட்டையாடுவதாக கூறிக்கொண்டு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுமேயானால் எதுவித சம்பந்தமும் இல்லாத அப்பாவி இளைஞர்கள் தலைமறைவாக வாழ முற்படுவர். தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். சிறீதரன் அவர்களுடைய நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்ந்து நடக்க இருப்பதற்கான முன்னோடியாகும். இதனை நாம் பாராமுகமாக விட்டுவிட முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால் இராணுவ முகாம்கள் தொடர்ந்து நடத்துவதற்கும் மேலும் சில ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாகும். இராணுவ முகாம்களை தொடங்குவது, பலப்படுத்துவது, யுத்த தளபாடங்கள் வழங்குவது போன்றவை சிறுபான்மை மக்களை நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ வைப்பதற்கே என்பது தெளிவாகத் தெரிகிறது. வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மையினர் மட்டுமல்ல சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்ற பேதமின்றி முழுநாட்டவர்களுக்கும் வாழ்க்கை பரிதாபகரமாக அமையப்போகிறது. சுருங்கக்கூறின் இந்த நாடு ஒரு இருண்ட எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறது என்பது தெளிவாகிறது. விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இன்றைய இராணுவத்தின் பிடியில் இருப்பதைவிட சிறந்ததென, அல்லது மோசமானதல்லவென விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்கூட நினைக்கவோ அல்லது சொல்லவோ கூடாது.
நீதி நிலைப்பதாக தோன்றவேண்டுமானால் இராணுவம் புலிகள் என்ற பெயரில் வேட்டையாடுவதை நிறுத்தி உடனடியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்; விடுதலை செய்ய வேண்டும். எதுவித மருத்துவ உதவியும் அளிக்காது கொடூரமான முறையில் கைவிடப்பட்டு மரணித்த, எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி ஏழைப் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தடுப்பிலுள்ள வேறுஎவருக்கும் ஏற்படக்கூடாது. இப் பெண்ணின்; மரணத்துக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரியொருவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவராவார். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா?
நீதி நிலைப்பதாக தோன்றவேண்டுமானால் இராணுவம் புலிகள் என்ற பெயரில் வேட்டையாடுவதை நிறுத்தி உடனடியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்; விடுதலை செய்ய வேண்டும். எதுவித மருத்துவ உதவியும் அளிக்காது கொடூரமான முறையில் கைவிடப்பட்டு மரணித்த, எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி ஏழைப் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தடுப்பிலுள்ள வேறுஎவருக்கும் ஏற்படக்கூடாது. இப் பெண்ணின்; மரணத்துக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரியொருவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவராவார். மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா?
வீ.ஆனந்தசங்கரி
Aucun commentaire:
Enregistrer un commentaire