lundi 12 mai 2014

மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், ஏழு போலீசார் பலி

 மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், ஏழு போலீசார், உடல் சிதறி உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. காங்கிரசை சேர்ந்த பிரித்விராஜ் சவான், முதல்வராக பதவி வகிக்கிறார். இங்குள்ள கட்சிரோலி மாவட்டத்தில், நக்சலைட்டுகள் தொல்லை அதிகமாக உள்ளது. இவர்களை ஒடுக்குவதற்காக, மகாராஷ்டிரா மாநில நக்சலைட் ஒழிப்பு போலீசார், அங்கு முகாமிட்டுள்ளனர். நேற்று, அங்குள்ள வனப் பகுதியில், போலீசார், ரோந்து பணிக்காக வாகனத்தில் சென்றனர். அப்போது, சாலையில் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை, நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர். இதில், ஏழு போலீசார், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், இரண்டு போலீசார், படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, காயமடைந்த போலீசார், ஹெலிகாப்டர் மூலம் நாக்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தாக்குதல் நடந்த இடத்துக்கு, கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக, கட்சிரோலி மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire