mercredi 14 mai 2014

நீதிமன்றம் தீர்ப்பு;மனைவியிடம் கட்டாய உறவு பலாத்காரம் அல்ல

மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது கணவருக்கு எதிராக காஜியாபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கூறினார். அந்த புகாரில், ”நான் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றில் பணியாற்றியபோது, அங்கு பணி செய்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், எனக்கு மயக்க மருந்து கொடுத்து தெளிவில்லாத நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து சென்று என்னை பதிவு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் எனது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி பலமுறை உறவு கொண்டார். இதற்கு அந்த இளைஞரின் தந்தையும் உடந்தையாக இருந்தார்” எனக் கூறியிருந்தார்.
இதையடுத்து, அந்த அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது பலாத்காரம், ஆள் கடத்தல், இயற்கைக்கு மாறான உறவு ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு காஜியாபாத் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்ததற்கான ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. பெண்ணின் வாக்குமூலமும் முன்னுக்குபின் முரணாக உள்ளது. பதிவு திருமண சான்றிதழில் பெண்ணின் கையெழுத்து உள்ளது. திருமணம் ஆன பிறகு அவரது சம்மதம் இல்லாமல் கணவர் உறவு கொண்டிருந்தாலும் அது பலாத்காரம் ஆகாது. எனவே, இந்த வழக்கிலிருந்து இளைஞரை விடுவிக்கிறோம்” என தீர்ப்பளித்தார்.
பொதுவாக மனைவி என்றாலும் அவரது சம்மதம் இல்லாமல் உறவு கொள்வது பலாத்காரம் என்றே பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. இந்நிலையில், டெல்லி நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire