mercredi 21 mai 2014

இருகரம் கூப்பி மோடி கூட்டனியிடம் மன்றாட்டம் வைக்கோ

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க கூடாது என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை: மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது. லட்சக்கணக்கான இலங்கை தமிழர்களின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. எனவே பதவி ஏற்பு விழாவில் பங்கு ஏற்க, ராஜபக்சேவை  அழைக்க கூடாது என தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார் வைகோ. கீழே உள்ள‌.உள் வீட்டுக்காரர் படம் விடுதலை புலிகள் அமைப்பின் பாலா அண்னா.இலங்கை அரசின் முன்னைநாள் பிறேமதாச....அந்த நாள் ஞபகம் 

Aucun commentaire:

Enregistrer un commentaire