lundi 1 décembre 2014

சர்க்கரை அறுவடை பணத்திற்காக‌ போராட்டம் நடத்திய ரோஜா

ஆந்திராவில் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகளுடன் நடிகை ரோஜா போரட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆந்திரா மாநிலம் ரேணு குண்டாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அரசு சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு அறுவடை செய்த பணத்தை கொடுக்காமல் நீண்ட காலமாக பாக்கி வைத்துள்ளது.
இந்த பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதற்காக, விவசாயிகளுடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா இன்று ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த போரட்டத்தில் பங்கேற்கும்படி ரோஜா பல கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் ஆதரவு திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் நெசவாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க கோரியும், ரோஜா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire