lundi 29 décembre 2014

பெங்களூருவில் குண்டுவெடிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலி

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்ததில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். பெங்களூருவில் தனியார் உணவு விடுதி அருகே இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து பெங்களூரூ நகர காவல்துறை ஆணையர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire