vendredi 19 décembre 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொருநபரே இறுதி முடிவை எடுப்பார் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்கள்;வீ.ஆனந்தசங்கரி

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை சரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டான தேர்தலாகையால் தமிழ் மக்கள் தமதுதெரிவில் மிககவனத்துடன் செயற்படவேண்டும். கடந்த தேர்தல்களில் குறிப்பாக இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும் போதுதமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாது ஒதுங்கி இருந்துகொண்டுதமிழ் மக்களைஅவர்களின் இஸ்டப்படி செயற்பட்டு யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுக்க அவர்களை விட்டுவிடவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழர்விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகிறது.
 கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் நடந்த தவறுகளின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் தகுதியைகூட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இழந்துவிட்டனர். இதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் இப்போது மாகாணசபை, பிரதேச சபை உறுப்பினர்களுடன் பேசுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் இரண்டொருநபரே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் ஏனையவர்கள் வெறும் ஆமாம் போடுபவர்களே என்பதையும் அனைவரும் அறிவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சுயநலமும் பதவி ஆசையும் பெருமளவு ஆட்கொண்டுள்ளமையால் மக்களை வழிநடத்தும் தகுதியையும் அவர்கள் இழந்துவிட்டனர். அத் தலைவர்களில் அநேகர் தமதுநிகழ்ச்சி நிரலின்படியேசெயற்படுவதோடு தமதுஎதிர்காலம் பற்றிய கனவுடனேயும் தமதுகட்சிகளின் எதிர்காலம் பற்றிய நினைவுகளுடனேயே இருக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியில புத்தி ஜீவிகளுக்கும், அனுபவசாலிகளுக்கும் பஞ்சமில்லை. மக்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கவும் திறமையான தலைமையை தகுதியுள்ள பலர்ஏற்க தயாராக உள்ளனர். தற்போதைய தமிழ் தேசியகூட்டமைப்பில்; இரண்டு மூன்று நபர்களை தவிர ஏனையோர் வெறும் ஆமாம் போடுபவர்களாகவே உள்ளனர். முக்கியமுடிவுகளை அந்த இரண்டு மூன்றுபேர்மாத்திரமே எடுக்கின்றனர். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இவர்களுடைய முடிவுகளை ஒழுங்காக பத்திரிகைகளில் எழுதுவதோடு அம்முடிவுகளை திரும்பதிரும்ப மிகைப்படுத்திவருகின்றனர். இலகுவாக வேலை செய்யமுடியும் என்பதால் ஆமாம் போடுகின்றவர்களை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தகுதியானவர்களிடம் ஆலோசனை பெற்றுகாலம் கடத்தாது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணமுயல வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் தலையிடாது தமிழ் மக்களைதாமாகதாம் விரும்புவருக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் அவர்களை செயற்படவிட்டு ஒதுங்கியிருக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பைகேட்பதற்கு தமிழர்விடுதலைக் கூட்டணிக்கு போதிய நியாயமான காரணங்கள் உண்டு. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசுகட்சி ,தமிழர்விடுதலைக் கூட்டணியை நீக்கிவிட்டு அந்தஅணியில் தம்மை இணைத்துக்கொண்டது. இதைதமது சொந்த இலாபத்துக்காகவும் ஓர் அரசியல் கட்சியாக தம்மைதக்கவைத்து கொள்வதற்குமாகவே அப்படி செய்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக புலிகள் சார்ந்தபுலம் பெயர்ந்தவர்களின் ஆதரவைபெறவே அவ்வாறுசெய்தனர். இதன்உள்நோக்கம் பற்றி அனைவரும் அறிந்ததே.
சாதாரணபொதுமக்களுக்;கு இச்செயல் தமிழர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற தவறானகருத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அநேகபிரச்சனைகளை எதிர்நோக்கியவர்கள் என்றும் பலதுன்பங்களோடு வடக்குகிழக்கு புலிகளின் ஆதிக்கத்தில் உட்பட்டகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். இன,மதபேதமின்றி அனைத்துமக்களும் பட்டதுன்பங்கள் சொல்லில் அடங்காது. அத்துடன் அவர்கள் இழந்த உயிரிழப்புக்கள், உடைமைகளின் பெறுமதிகளும் கணிக்கப்படமுடியாதவை. அப்படியிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தமிழ் மக்களைதவறாகவழிநடாத்தி சகலதேர்தல்களிலும் தம் இஸ்ட்ப்படி வாக்களிக்க வைத்துள்ளனர்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இந்ததுயரமானநிலை நீண்டகாலமாக நிலைத்து நிற்கிறது. மிகதுன்பகரமானவிடயம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் புலிகளுக்கு சார்பானவர்கள் என்றமுத்திரையை குத்திவைத்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் மீதுஉண்மையான அக்கறை இருப்பின் தாம் மௌனமாக இருந்துகொண்டு தமிழ் மக்களைதம் இஸ்டப்படி இத் தேர்தலில் செயற்பட்டு விடுதலைப்புலிகள் என்றுகுத்தப்பட்ட முத்திரையை அகற்றஉதவுமாறு த.தே.கூட்டமைப்பை த.வி.கூ கேட்டுக்கொள்கிறது.காலத்துக்குக் காலம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மிகசாதுரியமாக தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் சார்பானவர்கள் என்பதை உண்மைக்குமாறாக சாதித்தேவந்துள்ளனர்.
நாம் எதிர்நோக்கும் சகலபிரச்சனைகளையும் ஒவ்வொருதமிழ் மகனும் மிககவனமாகபரிசீலித்துவேட்பாளர்கள்; தத்தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன் வைத்துள்ள விடயங்களை நன்குஆராய்ந்து யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற நல்லமுடிவினை எடுக்கவேண்டும். கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களில் விட்டதவறை மீண்டும் விடாமல்  பகிஸ்கரிக்கும் எண்ணத்தை கைவிட்டு தமிழர்கள் தான் ஜனாதிபதியை தெரிவுசெய்வார்கள் என்ற இறுமாப்பு எண்ணத்தையும் கைவிடுமாறு தமிழர்விடுதலைக் கூட்டணிவலியுறுத்துகிறது.
வீ.ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

Aucun commentaire:

Enregistrer un commentaire