jeudi 25 décembre 2014

யேசு பிறந்தநாள் ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை: மதுரையில் பரிதாபம்

தேனுார் : மதுரை அருகே தேனுாரில் மனநலம் பாதித்த மகனை காப்பாற்ற வழியின்றி தந்தை, தாய் மற்றும் மகன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனுார் கிழக்குத்தெரு குழந்தைவேலு, 68. இவரது மனைவி தனபாண்டியம்மாள், 56. இவர்களது மகன் பால்பாண்டி, 32. குழந்தைவேலு மரம் வெட்டி கூலிவேலை செய்து வந்தார். கொத்தனாராக வேலை செய்த பால்பாண்டிக்கு ஏழு மாதங்களுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டது. அதிக பணம் செலவழித்து சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. விரக்தியுற்ற குழந்தைவேலு குடும்பத்தினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இரவு உறவினர்களிடம் பேசி விட்டு வீட்டிற்கு குழந்தைவேலு திரும்பினார். பின் மூவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு படுத்து விட்டனர்.நேற்று காலை வீடு மூடிக் கிடந்ததை கண்டு அருகில் இருந்தவர்கள் பார்த்த போது மூவரும் இறந்து கிடந்தது தெரிந்தது.சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் மூவரது உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணை நடக்கிறது.கடிதம் சிக்கியது
இறந்த குழந்தைவேலுவின் கையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தாங்கள் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்வதாகவும்,  தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire