dimanche 21 décembre 2014

ஜெயலலிதா வழக்கை முடிப்பதற்கு அக்கறை எடுக்கும்நீதிபதிகள்;தமிழ்நிலவன்

ஜெயலலிதா வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டுமென்று உத்தரவிடும் நீதிபதிகள்.
அவர்கள் அமர்வில் கடந்த ஒரு ஆண்டுகளாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழுபேர் வழக்கு விசாரணையை எடுத்து விசாரிக்க தயங்குவது ஏன்?
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு கொஞ்ச காலத்துக்குள்ளேயே வழக்கை முடிப்பதற்கு அக்கறை எடுக்கும்நீதிபதிகள் .24 ஆண்டுகள் சிறையில் இருப்போர் தொடர்பான வழக்கை விசாரிக்க தயங்குவது ஏன்?
ஜெயலலிதாவுக்கு அரசியல் பின்புலம் இருப்பதால் எவ்வளவு குற்றம் செய்தாலும்.அவர்களுக்கு நீதிமன்றமும்,போலிசாரும் துணைபோவார்கள்.
அப்பாவிகள் என்றால் நீதித்துறை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தான் செயல்படுவார்களோ ?
இந்திய நீதிதுறைதான் ஊழல் வாதிகளையும்,அரசியல் வாதிகளையும் வளர்த்து விடுகிறார்கள்.?
அதே நேரம் பொய் வழக்கு போட்டு சிறை செல்வோரை குற்றவாளியாக்கி அவனை மோசமானவனாகவும்,கிரிமினலாக்குவதும் நீதிதுத்றையும்,போலிசாருமே.
அதனால் தான் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு பார்த்து நீதியை குழி தோண்டி புதைத்து.அரசியல் வாதிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள்.......

Aucun commentaire:

Enregistrer un commentaire