mercredi 20 juin 2012

மாதகல் மேற்கு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ...துணுக்காய் பிரதேசத்தில் 712 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் அபகரிப்பு!

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி மாதகல் மேற்கில் ஜெ. 162 கிராம மக்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக

துணுக்காய் பிரதேசத்தில் 712 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் அபகரிப்பு  தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காணியையும் கோட்டை கட்டியகுளம் பகுதியில் 150 ஏக்கர் காணியையும் தேறாங்கண்டல் பகுதியில் சுமார் 250 ஏக்கர் காணியையும் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 112 ஏக்கர் காணியையும் இராணுவத்தினர் ஆக்கிரமித் துள்ளனர்.முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் சுமார் 712 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் காணிகளையும் அரச காணிகளையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அந்தக் காணிகளைத் தமக்கு வழங்குமாறு தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றனர்.

துணுக்காய் தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காணியையும் கோட்டைகட்டியகுளம் பகுதியில் 150 ஏக்கர் காணியையும் தேறாங்கண்டல் பகுதியில் சுமார் 250 ஏக்கர் காணியையும் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 112 ஏக்கர் காணியையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து அந்தக் காணிகளில் முகாம்களை அமைத்துள்ளதுடன் பயிர்ச் செய்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் பிரதேசத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகள் இன்றி வாழ்ந்து வருகின்றன.
அமைதிபுரம், தென்னியன்குளம், கோட்டைகட்டிய குளம், பழைய முறிகண்டி, தேறாங்கண்டல், ஆலங்குளம், அனிஞ்சியன்குளம், ஐயன்கன்குளம் போன்ற பகுதிகளிலேயே இராணுவத்தால் இந்தக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire