dimanche 24 juin 2012

யாருக்காகவும் எதற்காகவும் எம் இருப்பிடத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை


எதிர்ப்பு அரசியலில் அபிவிருத்திகளை விட்டுக் கொடுக்கவோ கலப்பு அரசியலால் உரிமைகளை விட்டுக் கொடுக்கவோ த.ம.வி.பு கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் என்றும் தயார் இல்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்று மக்களின் வரிப்பணத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அபிவிருத்திப் பணிகளை 65 வருடங்களாக ஏனைய சமூகங்களிற்கும் ஏனைய மாவட்டங்களிற்கும் கொடுத்து விட்டு அண்ணார்ந்து பார்க்கும் நிலையினையோ அல்லது அபிவிருத்தி மட்டும் போதும் என்று யதார்த்த பூர்வமான உரிமை விடயங்களையும் கை விட்டு விடவும் இல்லை, என்பதை கடந்த 4 வருடங்களில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணம் 3 இனங்களையும் கொண்ட பல் இன மக்கள் வாழும் மாகாணம். ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் தாம் சார்ந்த இனக் குழுக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவார்கள். அபிவிருத்திகள் என்று வரும் போதும் உரிமைப் பிரச்சினைகளையேனும் தம் மக்களினையே கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். இதுவே உண்மையானதும் கடந்த காலம் கற்றுக் கொண்ட பாடமும் ஆகும்.
கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட 2008ம் வருடம் தொடக்கமே தமிழ் பேசும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான அதிகாரங்களை நுகரத் தொடங்கியது மட்டுமன்றி அரசியல் பேசவும் ஆரம்பித்துள்ளனர். பல இளம் தலைமுறைகள் அரசியலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இது நல்ல எதிர் காலத்தினை தோற்றுவிக்கும் இவ் வேளையில் மீண்டும் மாகாண சபை ஆட்சி அதிகாரமும் தமிழரின் கரங்களை விட்டுச் சென்றதால் விளைவு விபரீதமாக மிகவும் பிடிப்போடு இருக்கும் மட்டக்களப்பு மாவட்டம் நாளை தனித்துவத்தினை இழக்கும் நிலை ஏற்படும்2010ம் வருடம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாவாதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் த.ம.வி.பு கட்சி எடுத்த தீர்க்கத்தரிசனமான முடிவே காரணம். இன ஒற்றுமை தொடர்ந்து நிலவுவதற்கு ஏற்றத் தாழ்வற்ற அபிவிருத்தியும் அரசியல் அதிகாரங்களும் மிகவும் தேவைப்பாடான ஒன்றாகும். என்று வளங்கள் ஓர் இனத்தின் பக்கம் குவிக்கப்படுகின்றதோ ஏனைய இனங்கள் பாதிக்கப்படுவதனை உணர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த போராட ஆரம்பிக்கின்றது. இதன் வெளிப்பாடு கடந்த கால ஏக்கம். இவ் ஏக்கத்திற்கு வித்திட்டது எமது எதிர்ப்பு அரசியலும் சில கால கலப்பு அரசியலும் ஆகும்.
ஆனால் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மேற்கொள்வது இணக்கப்பாட்டு அரசியல் தாம் சார்ந்த சமூகத்தின் வலுவாக்கத்திற்காக ஆனாலும் அரசுடன் சுமூகமான இனக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்கின்றது. யதார்த்த பூர்வமான தேவைப்பாடும் இதுவாகவே உள்ளது.கிழக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் தமிழர்கள் இருக்கும் நிலை உருவானால் மீண்டும் எமது இருப்பு கேள்விக் குறியாகி விடும். இதற்கு இடம் கொடுக்க ஒரு போதும் த.ம.வி.பு.கட்சி தயாராக இல்லை என்பதனை உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன் என கி.மா.சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான கொள்கை விளக்கக் கூட்டம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரையம்பதி மாகாணசபை இணைப்பு பணிமனையில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire