vendredi 29 juin 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியான ஜே.வி.பி


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியான ஜே.வி.பி போட்டியிடுமென ஜே.வி.பி. யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி. யின் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஜே.வி.பி.போட்டியிட தீர்மானித்துள்ளது. ஜே.வி.பி. கட்சியானது எந்தக்கட்சியுடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடமாட்டாது. தனித்தே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஜே.வி.பி இதற்காக வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது எனவும் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire