dimanche 17 juin 2012

சீர்குலைக்கும்மகிந்த அரசைக் கவிழ்ப்போம் என்கிறது ஐ.தே.க

நாட்டின் நீதியையும், சமாதானத்தை யும் சீர்குலைக்கும் கொடூரச் செயல்க ளை மகிந்த அரசு அரங்கேற்றி வரு கின்றது. நாட்டில் நீதியையும் சமா தானத்தையும் நிலைநிறுத்தத் துடிக் கின்ற அரச தரப்பிலுள்ள அமைச்சர் களையும் எம்முடன் இணைத்துக் கொண்டு மகிந்த அரசை ஆட்சியிலி ருந்து கவிழ்ப்போம். அந்தக்காலம் வெகுதொலைவில் இல்லை என ஐக் கிய தேசியக்கட்சி அரசுக்கு எச்சரித்து ள்ளது.

உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடையும்போது, உள் நாட்டில் அதன் விலையைக் குறை க்க முடியாத மகிந்த அரசு எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸவிட மும், அரசிடமும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அகி லவிராஜ் காரியவசம் கேள்வி எழுப் பியுள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார். இச் சந்திப் பின்போது அவர் மேலும் தெரிவிக் கையில்,நாட்டின் நீதியும் சமாதான மும் அரசினால் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அரசால் அரங் கேற்றப்பட்டு வருகின்ற கடந்த காலச் சம்பவங்களே சான்றாகும். இலங்கை விமான சேவை நிறுவனத்தின் தலை வர் நிஷாந்த விக்கிரமசிங்கவின் வீட்டிலிருந்து 11 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தையும் சொத்துக்களையும் கொள்ளையர்கள் கொள்ளையடித் துச் சென்றுள்ளனர்.எமது நாட்டு நீதி க்கமைய ஒருவர் இரண்டாயிரம் அமெரிக்க டொலர் பணத்தை மட்டு மே தம்வசம் வைத்திருக்க முடியும். இரண்டாயிரம் அமெரிக்க டொலருக் கு மேல் பணம் வைத்திருந்த தால் தான் சரத் பொன்சேகாவின் மரும கன் தனுன திலகரத்னவின் தாயா ரைப் பொலிஸார் கைது செய்தனர். ஆனால், நிஷாந்த விக்கிரமசிங்க வின் வீட்டிலிருந்து 11 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் பணமும் சொத்து க்களும் கொள்ளையடிக்கப்பட்டுள் ளன.

ஏன் இவருக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கைகையும் எடுக்கவில்லை? அரசிலுள்ளோர் சட்ட விதிகளை மீறி ச் செயற்படும் போது, அந்தச் சட்டத் தையே தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர்.தமது முழு அதிகார த்தையும் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறு வதற்காக அவற்றைக் கட்டம் கட்ட மாக நடத்த அரசு திட்டமிடுகின்றது. கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைத் தேர்தல் செலவிற் காக 150 கோடி ரூபாயை அரசு ஒது க்கியுள்ளது.

இது யாருடைய பணம்? ஏன் இந்தப் பணத்தை இவ்வாறு நாசம் செய்கி ன்றனர்? இறுதியில் இந்தப் பாரிய சுமை அனைத்தையும் அப்பாவி மக் களின் தோள்களிலே யே அரசு சுமத் தும்.இவ்வாறு ஐ. தே. க. நாடாளு மன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரி யவசம் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire