lundi 25 juin 2012

உதவி ஒன்றுக்கு, “நோ.. தாங்ஸ்” சொல்லி அதிர வைத்திருக்கிறது இலங்கை அரசு

                                  டில்லி செய்ய முன்வந்த உதவி ஒன்றுக்கு, “நோ.. தாங்ஸ்” சொல்லி அதிர வைத்திருக்கிறது இலங்கை அரசு. யுத்தம் நடைபெற்ற வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், விமான நிலையத்தை டெவலப் செய்தும் திட்டத்தில் இருந்து இந்தியாவை கழட்டி விட்டிருக்கிறது கொழும்பு.
யாழ்ப்பாணத்தில், பலாலி என்ற இடத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. யுத்தம் துவங்குவதற்குமுன் சிவில் பாவனைக்கான விமான நிலையமாக இருந்த பலாலி, இலங்கை ராணுவத்தின் தளமாக மாறியது. யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தின் மிகப்பெரிய படைத்தளமே பலாலிதான்.
அமைச்சர் ஜெயரத்னே: “வுடுங்க பங்காளி.. நாங்களே பாத்துக்கிறம்”
யுத்தம் முடிந்தபின், இந்த விமான நிலையத்தை மீள்கட்டமைப்பு செய்து, பன்னாட்டு விமான நிலையமாக்கும் ப்ராஜெக்ட் ஒன்றை செய்ய இந்தியா முன்வந்தது. அதற்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்தது.
இதை இந்தியா பெற்றிராவிட்டால், என்ன ஆகியிருக்கும்? ஹம்பாந்தோட்ட என்ற இடத்தில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைத்துக் கொடுத்த சீனா, பலாலியிலும் விமான நிலையம் கட்டிக் கொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கும். இலங்கையில் யுத்தம் முடிந்தவுடன், சீனாவும், இந்தியாவும் துண்டுபோட்டு சீட் பிடித்த ப்ராஜெக்ட்களில் இதுவும் ஒன்று.
இங்குள்ள முக்கிய விவகாரம் என்னவென்றால், விமான நிலைய ப்ராஜெக்ட்டை இந்தியாவுக்கு கொடுப்பதாக இலங்கை பேச்சளவில் ஒப்புக் கொண்டிருந்த போதிலும், ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை.
சமீபகாலமாக டில்லிக்கும், கொழும்புக்கும் இடையே உறவுகள் சுமுகமாக இல்லை. இதையடுத்து, விமான நிலைய திட்டத்தில் இந்தியாவை கூட்டுச் சேர்ப்பதில்லை என அறிவித்துள்ளது இலங்கை.
இலங்கையின் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ப்ரியங்கார ஜெயரத்னே, தமது அமைச்சு விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். “பலாலி ஏர்போர்ட் பொதுமக்களின் பாவனைக்காக மீள்கட்டுமானம் செய்யப்படும் பணியில், எமது அமைச்சும், விமானப்படையும் இணைந்து ஈடுபட உள்ளோம். இந்திய கூட்டுத் திட்டமாக இது செயல்படாது” என அறிவித்துள்ளார்.
இப்படி சொல்லி டில்லியை கழட்டிவிட்டு, சீனாவிடம் திட்டத்தை ஒப்படைத்தால் என்னாகும்? (இருந்து பாருங்கள். அநேகமாக அப்படித்தான் நடக்கும்).

Aucun commentaire:

Enregistrer un commentaire