jeudi 14 juin 2012

கோத்தாவை பிரதமராக்கும் அதிரடி நடவடிக்கையில் மகிந்த!

கொழும்பு ஊடகம் தகவல்

இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயர த்ன தற்போது சுகவீனமுற்றிருப்ப தால், அவருக்குப் பதிலாக ஜனாதிபதி யின் சகோதரரும் பாதுகாப்பு அமைச் சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்­வை அந்தப் பதவிக்கு நியமி க்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தீர் மானித்துள்ளார் என கொழும்புத் தக வல் ஒன்று தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் விரிவான செய்தி ஒன்றை லங்கா நியூஸ் இணையத்த ளம் வெளியிட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டி.எம்.ஜயரத்ன அண்மைக்காலமாக சிங்கப்பூர் மெளவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது நாடு திரும்பியுள்ள போதிலும் அவர் தமது பணிகளை முன்னெடுத்து செல்ல முடியாது என மருத்துவ நிபுணர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஜனாதிபதி அண் மைக்காலமாக பலமுறை முயற்சி த்தார். எனினும், பிரதமர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதில் ஏற் பட்ட நெருக்கடியால் அந்தத் தீர்மான த்தை அவர் தொடர்ந்து ஒத்திவைத்து வந்தார்.

எனினும், அடுத்து நடத்தத் திட்டமிட் டுள்ள 3 மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் செய்து, அதன்போது பிரதமர் பத வியை கோத்தபாய ராஜபக்­விற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள் ளார். மகிந்த ராஜபக்­ லண்டன் பய ணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியவுடன், மகிந்தவிற்கு நெரு க்கமான சிலருடன் இது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள் ளார்.

இந்தக் கலந்துரையாடலில் அரச வங் கியின் உயர் அதிகாரியயாருவரும், சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலரும், ஜனாதிபதியின் மைத்துனர் ஒருவ ரும் கலந்து கொண்டுள்ளனர். மைத் திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் சிறிலங்கா சுதந் திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் களாக இருக்கின்றனர். எனினும், இவ ர்கள் மீது எவ்விதத்திலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.அத் துடன், பசில் அல்லது சமல் ஆகி யோரில் ஒருவரை பிரதமராக நிய மிக்க ´ராந்தி ராஜ பக்­ உள்ளிட்ட, தனது மகன் நாமல் ராஜபக்­விற்கு விருப்பமில்லை எனவும் குறிப்பிட் டுள்ளார்.இந்த நிலையில், தினேஷ் குணவர்த்தனவை பிரதமராக நியமி க்க தான் எதிர்பார்த்திருந்த போதி லும், அவர் பாரிய ஊழல் மோசடிக ளைச் செய்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக்­, ஆவணங்கள் சிலவற்றைக் காண்பி த்து தனக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்து ள்ளார்.

பிரதமர் ஒருவரை நியமிக்கும் போது நாமல் ராஜபக்­வின் அரசியல் எதிர் காலத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகை யில் ஒருவரை நியமிக்க வேண்டாம் என இந்தக் கலந்துரையாடலில் பங் கேற்ற அனைவரும் ஜனாதிபதியை அறிவுறுத்தியுள்ளனர்.இதனை ஏற் றுக் கொண்ட ஜனாதிபதி, கோத்த பாய ராஜபக்­வை பிரதமராக நியமி ப்பதற்கு தனது மனைவியும், மகன் மார் மூவரும் விருப்பம் தெரிவித்து ள்ளதாகவும் இதன் போது தெரிவித்து ள்ளார்.

இதனடிப்படையில், தேசியப் பட்டிய லின் ஊடாக நாடாளுமன்றத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள ஜனக பண்டா ரவை நீக்கிவிட்டு, கோத்த பாய ராஜ பக்­வை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து, அவருக்கு நகர அபி விருத்தி, பெளத்த விவகார, கலாசார அமைச்சுப் பதவியை வழங்கி, பாது காப்பு பிரதியமைச்சராக நியமிக்க முதலில் நடவடிக்கை எடுப்பதென இந்தக் கலந்துரையாடலில் தீர்மானி க்கப்பட்டுள்ளது.

மேலும், தேசியப் பட்டியலில் நாடா ளுமன்றத்திற்குப் பெயரிடப்பட்டுள்ள மாலினி பொன்சேகா, கமலா ரண துங்க, ஜே.ஆர்.பி.சூரியப் பெரும, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஆகி யோரையும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக விசுவாசமான சிலரை நியமிக்க தான் தீர்மானித்துள்ளதாக வும் ஜனாதிபதி இதன்போது தெரிவி த்துள்ளார்.இவர்களில் ஒருவரை வெளிவிவகார அமைச்சராகவும் நிய மிக்கவும் தான் எதிர்பார்த்துள்ளதாக வும் ஜனாதிபதி இதன்போது தெரிவி த்ததாக லங்கா நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire