vendredi 22 juin 2012

தமிழினியை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு இலங்கை நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.


சுப்ரமணியம் சிவகாமி என்ற இயற்பெயரிலான தமிழினி, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் படையினரிடம் சரணடைந்ததை அடுத்தே கைது செய்யப்படதாக கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்திடம் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
தமிழினிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை தவிர்த்து அவரை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த சட்டமா அதிபர் பரிந்துரைத்ததாக பொலிஸார் தரப்பில் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக தமிழினியின் சட்டத்தரணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழினியும் அதற்கு உடன்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவரை வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire