dimanche 14 septembre 2014

100 பேர் சாவு நைஜீரியாவில்

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் தனி இஸ்லாமிய நாடு உருவாக்க வலியுறுத்தி தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்துடன் போரிட்டு வருகிறார்கள். மேலும் அப்பாவி பொதுமக்களை கடத்தி கொன்றுகுவித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் போகோ ஹரம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த கொண்டுகா நகரில் நேற்று முன்தினம் நைஜீரியா ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் குண்டுகளை வீசி வான்வழியாகவும், தரைமார்க்கமாகவும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் தீவிரவாதிகள் பயன்படுத்திய வாகனங்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire