samedi 6 septembre 2014

தீர்ப்பளித்தது புலி உறுப்பினருக்கு 20 வருட கடூழிய சிறை

வடமத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29பேரை குண்டுத் தாக்கி கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டிப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான சண்முகநாதன் சுதாகரனை, குற்றவாளி என இனங்கண்ட அநுராதபுரம் மேல் நீதிமன்றம், அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சுதாகரன், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே நீதிமன்றம் இன்று (05) இந்த தீர்ப்பை வழங்கியது.  புலிகள் இயக்கத்தில் கேணல் பதவிநிலை வகித்த செங்கலடியைச் சேர்ந்த சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.  கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, குண்டுத் தாக்குதலை நடத்தி ஜானக பெரேரா உட்பட 29பேரை கொலை செய்தார் என்று இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire