lundi 22 septembre 2014

ஸ்ரீநிவாசு மாண்டலின் என்ற வாத்திய பிறவிக்கலைஞனுக்கு அஞ்சலி

  தமிழ்த் திரையிசையில் மாண்டலின் என்ற வாத்தியம் பெரிதாகக் கோலோச்சாததாலோ என்னமோ அந்த வாத்தியத்தை தமிழ்த் திரியிசையில், கேட்டு ரசித்த அனுபவ பெரிதளவில் எனக்கில்லை. ஆனால் மாண்டலினைப்பற்றிய செய்திகள் ஏதாவதை எப்போதாவது பார்க்கும் போதெல்லாம் அங்கே ஸ்ரீநிவாசின் பெயரும் இடம்பெற்றிருக்கும். அதனால் மாண்டலினென்றால் ஸ்ரீநிவாசும் அவரின் முகமும் சேர்ந்தே என் நினைவில் வருவதுண்டு. . ஒருமுறை அவரின் ஆல்பம் ஒன்றை சிடிக் கடையொன்றில் கண்டு வாங்கியிருந்தேன் ஆனால் அது கர்னாடக இசை ஆல்பமாக இருந்ததால் பெரிதாக அதைக் கேட்டு ரசிக்க முடியவில்லை.
தென்றலே என்னைத் தொடு என்ற படத்தில் இடம்பெற்ற புதிய பூவிது பூத்தது என்ற பாடலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தப்பாடலின் ஒலிப்பதிவன்று வயிலின் கலைஞர்களால் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதாம். ஆனால் அந்தப்பாடலைப் படம்பிடிப்பதற்காக வெளியூர் சென்றுவிட்ட இயக்குனர் ஸ்ரீதருக்கு பாடலை அனுப்பியே தீரவேண்டிய கட்டாயாம் மேஸ்ட்ரோவுக்கு. அதனால் அந்தப்பாடலில் வயிலின்களைப் பாவிப்பதற்குப் பதிலாக ராஜா மாண்டலின்களைப் பாவித்திருப்பாராம். அந்தப்பாடலின் பின்னணியிசையை உற்றுக் கேட்டால் அந்தச் சூட்சுமம் புரியும்.
அந்தப்பாடலுக்குப் பின்புதான் மாண்டலினைப்பற்றிய விளக்கமான அனுபவம் எனக்குக் கிடைத்ததென்றால் அது மிகையல்ல.
அதன்பின் எனக்குள் ஒரு வினாவும் எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. மேஸ்ட்ரோ ஏன் மாண்டலின் ஸ்ரீநிவாசை தனது பாடல்களில் ஒருமுறையேனும் பாவிக்கவில்லையென்ன்பதும் ஒருமுறையாவது பாவிக்க வேண்டுமென்பதே அது. ஸ்ரீநிவாஸ் மட்டும் மேஸ்ட்ரோவின் இசையில் ஒரு பாட்டுக்காவது மாண்டலின் வாசித்திருந்தால் கடைக்கோடி தமிழ் ரசிகனுக்கும் மாண்டலின் என்ற வாத்தியமும் அதன் இசையும் இன்னும் அருகில் சென்றிருக்கும். ஆனால் அதுதான் இறுதிவ்வரை நடக்காமல் போய்விட்டதே..
இப்போ மாண்டலின் என்ற வாத்தியம் ஒரு சாதாரண தமிழ் ரசிகனுக்கு இன்னும் அன்னியமாக... தொலைதூரம் போய்விட்டது.
மறைந்துவிட்ட அந்தப் பிறவிக்கலைஞனுக்கு அஞ்சலி செலுத்தும் இவ்வேளையில் மனதில் ஒரு எண்ணம் பளிச்சிடுகின்றது ..
உலகத் தரம் வாய்ந்த கர்னாடக சங்கீதக் கலைஞர்கள் தமிழ்த் திரையிசையில் பயன்படுத்தப்பட வேண்டும். அது திரையிசையில் இன்னும் பல புதிய பரிமாணங்களின் அறிஉகத்துக்கு வழியமைக்கும். அது
இசையமைப்ப்பாளர்களுக்கும்..
கலைஞர்களுக்கும்..
கடைக்கோடி ரசிகனுக்கும்,,
தமிழ்த் திரையிசைக்கும் மிக நல்லது !!    Kalaichelvan Rexy Amirthan

Aucun commentaire:

Enregistrer un commentaire