vendredi 19 septembre 2014

சர்வதேச மாநாடு மஹிந்த உரை அனைத்து நாட்டு பயங்கரவாதிகளும் ஒரேவிதமானவர்களே

அனைத்து பயங்கரவாதிகளும் ஒரேவிதமானவர்களே – ஜனாதிபதி:-அனைத்து பயங்கரவாதிகளும் ஒரே விதமானவர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவத்துள்ளார்.

ஆசிய அரசியல் கட்சிகளின் 8ம் சர்வதேச மாநாடு இன்றைய தினம் கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ அரங்கில் ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவத்துள்ளார்.

அனைத்து பயங்கரவாதிகளும் அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யவே தயாராகின்றனர் எனஅவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது தொடர்பிலான அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயார் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு பிரதானமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளின் போது பேதங்களை களைந்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire