jeudi 18 septembre 2014

பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து பிரிவது குறித்த ஸ்கொட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பு

இங்கிலாந்துடனான ஒன்றியத்தில் இருந்து தனி நாடாக சுதந்திரம் பெறுவதை தீர்மா னிக்கும் ஸ்கொட்லாந்து சர்வஜன வாக் கெடுப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற வுள்ளது. இதனையொட்டி சுதந்திரத்திற்கு ஆதரவான மற்றும் எதிரான இரு முகாம் களும் நேற்று இறுதி நாள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன.
புதிய கருத்துக் கணிப்புகளின்படி சுதந்திரத்திற்கு ஆதரவு மற்றும் எதிரான வாக்குகள் மிக நெருக்கமாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறு இடை வெளியில் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வ தற்கு மக்கள் எதிராக இருப்பதாகவும் குறிப்பிடத்தக்க வாக்காளர்கள் இன்னும் எதற்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க வில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இன்று இடம்பெறும் சர்வஜன வாக் கெடுப்பில் ~~ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக இருக்க வேண்டுமா?" என்று கேட்கப்பட்டு வாக்காளர்கள் ஆம் அல்லது இல்லை என்று பதிலளிக்கவுள்ளனர். இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்துடனான 307 ஆண்டு ஒன்றியத் திற்கு முடிவுகட்டுங்கள் என்று ஸ்கொட் லாந்து சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரசாரம் நடத்தும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலக்ஸ் சல்மொன்ட் கோரியுள்ளார்.
"வெள்ளிக்கிழமை காலை ஒரு சிறந்த நாட்டின் முதல் நாளில் விழித்தெழுங்கள். இவ்வாறு விழித்தெழும்போது இந்த மாற்றத்தை நீங்கள்தான் செய்தீர்கள் என்று உணர்வீர்கள்" என சல்மொன்ட் ஸ்கொட் லாந்து மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். "இது உங்களது நாட்டின் எதிர்காலத்தை உங்கள் கையில் எடுக்கும் சந்தர்ப்பமாகும். எமது கைகளில் இருந்து இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட வேண்டாம். இதனை எமக்கு செய்ய முடியாது என்று அவர்களை சொல்ல வைத்துவிடாதீர்கள்" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்கொட்லாந்து பிரிவதற்கு எதிராக பிரசாரம் நடத்தும் முகாமிற்கு தலைமை வகிப்பவர்களில் ஒருவரான பிரிட்டன் முன்னாள் நிதியமைச்சர் அலிஸ்டயர் டார் லின், சுதந்திரத்தை நிராகரிப்பது ஸ்கொட் லாந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் இருந்து வேகமான மற்றும் சிறந்த மாற்றத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார். சர்வஜன வாக்கெடுப்பில் சுதந்திரத்திற்கு எதிராக பிரசாரத்தில் தீவிரம் காட்டும் பிரிட்டனின் 3 பிரதான அரசியல் கட்சிகளும் ஸ்கொட்லாந்து அரசுக்கு அதிக அதிகாரங் களை வழங்க வாக்குறுதி அளித்துள்ளன.
இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மூன்று பத்திரிகை களினதும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு களில் சிறு இடைவெளியில் சுதந்திரத்திற்கு எதிராக மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந் துள்ளது. இன்னும் குறிப்பிடத்தக்க மக்கள் எதற்கு வாக்களிப்பது என்பதை தீர்மா னிக்காமல் உள்ளனர். இவர்களின் வாக்கு இறுதி முடிவில் தீர்க்கமானதாக இருக்கும் என கருதப்படுகிறது. "இந்த வாக்கெடுப்புகள் மற்றும் அண் மைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் நாம் இடைவெளியை தொட்டு வியாழக் கிழமை வெற்றிபெறுவோம் என்பதை காட்டு கிறது" என்று ஸ்கொட்லாந்து சுதந்திர ஆதரவு பிரசார முகாமின் நிறைவேற்று அதிகாரி பிளையர் ஜங்கின்ஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது ஒரு கத்திமுனை வாக்கெடுப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வாக்களிக்க அனுமதிக்கப்பட்டவர்களில் அதிக பெரும்பாலானவர்கள் வாக்குச் சாவடி களுக்கு வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. அனைத்து கணிப்புகளையும் பார்க்கும் போது வாக்குப்பதிவு 80 வீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தலைமை வாக்கு எண்ணும் அதிகாரி மேரி பிட்கைத்லி குறிப்பிட்டுள்ளார். இவரே நாளை வெள்ளிக் கிழமை தேர்தல் முடிவை உத்தியோக பு+ர்வமாக அறிவிக்கவுள்ளார். சுமார் 4.3 மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு இதில் சுமார் 97 வீதமானவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கு எதிராக பிரசாரம் நடத்துவோர் நேற்றைய தினத்தை ஐக்கியத்தின் தினமாக பிரகடனம் செய்தனர். இவர்கள் ஸ்கொட்லாந்துக்கு வெளியில் பெல்பாஸ்ட், லண்டன் மற்றும் மான்செஸ்டர் நகரங்களில் பேரணி நடத்தியுள்ளனர். இதனிடையே ஸ்கொட்லாந்து சர்வஜன வாக்கெடுப்பையொட்டி பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் பிரசார செயற் பாடுகளுக்கு பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. ஸ்கொட்லாந்து சர்வஜன வாக் கெடுப்பில் சுதந்திரத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் பிரதமர் கெமரூன் பதவி விலகவேண்டும் என்று பிரிட்டன் பாராளுமன்றத்தின் பல உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பிரிட்டனிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து தனி நாடாகுமானால், அது மிகவும் வேதனையளிக்கக் கூடிய பிரிவினையாக இருக்கும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட் லாந்தின் பிரிவினைக்கு எதிராக உரை யாற்றிய கெமரூன் மேலும் கூறும்போது, "பிரிட்டனின் பகுதியாக ஸ்கொட்லாந்து தொடர வேண்டும் என எங்களுடைய இதயம் கூறுகிறது. ஆனால் தனி நாடாக வேண்டும் என்ற முடிவு ஏற்படுமானால், அது சோதனை முறையிலான தாற்காலிகப் பிரிவாக இருக்காது. பிரிவினை என்பது மிகுந்த வேதனையளிக்கும்.
இந்தப் பகுதியினரின் ஓய்வு+தியம் முதல் நாணய அலகு வரை ஏராளமான பொருளாதார விடயங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். நமது இராணுவம் துண்டா டப்படும். இரு நாடுகளுக்கும் இடையே உருவாகும் புதிய எல்லைக்கோட்டைக் கடப்பது எளிதல்ல என்ற நிலை உருவாகும். சுதந்திர நாடு என்ற கரைந்து போய்விடக் கூடிய கனவை ஸ்கொட்லாந்து மக்கள் ஏற்கக் கூடாது என விரும்புகிறேன" என்றார். ஆரம்பகாலத்தில் தனி நாடாக இருந்து வந்துள்ள ஸ்கொட்லாந்து, 1603ஆம் ஆண்டு முதல் பிரிட்டன்; முடியாட்சியின் கீழ் வந்தது. 1707ஆம் ஆண்டு இங்கிலாந்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் கீழ் பிரிட்டனின் ஒரு பகுதியான பின்னர், ஸ்கொட்லாந்து பாராளுமன்றம்; முடிவுக்கு வந்தது.
அதே வேளையில், சட்டம், கல்வி, மத அமைப்பு, நிர்வாகம் ஆகிய துறைகளில் முன்னூறு ஆண்டுகளாக சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தது. 1997இல் நடைபெற்ற வாக்கெடுப்பை யடுத்து அங்கு மீண்டும் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, பிரிட்டனிலிருந்து முற்றிலும் சுதந்திரம் பெற்ற தனி நாடாக வேண்டுமா என்பதற்கான வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஸ்கொட்லாந்து பகுதியில், எண்ணெய் வளம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. பிரிவினைக்கு ஆதர வாகப் பெரும்பான்மை வாக்கு இருக்கு மானால், முழுமையான சுதந்திரம் பெறு வதற்கான நடவடிக்கைகள் நிறைவேற 18 மாதங்களாகும். ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெறும்பட்சத் தில் பிரிட்டனின் சர்வதேச சக்தி கேள்விக் குறியாகிவிடும். பிரிட்டனின் மூன்றில் ஒரு நிலப்பகுதியை ஸ்கொட்லாந்து பிரதிநிதித் துவப்படுத்துகிறது. இந்நிலையில் ஸ்கொட் லாந்து பிரிந்து சென்றால் பிரிட்டனின் வெளி நாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஸ்கொட்லாந்து விவகாரம் குறித்து அமெரிக்கா உத்தியோகபு+ர்வமாக ஒருசில வார்த்தைகளையே வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் மிக நட்பு மிக்க நாடான பிரிட்டன் தனது ஒன்றியத்தின் கீழ் சிறப்பாக செயற்பட்டு வந்தது என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த ஜ{ன் மாதம் குறிப்பிட்டிருந்தார். "எமக்கு எப்போதும் எஞ்சியிருக்கும் மிக நெருங்கிய நட்பு நாடு ஒன்றியத்துடனும், வல்ல மையுடனும், பயனுள்ளதாகவும் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதில் நாம் அதிக கவனம் செலுத்துகிறோம்" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire