mercredi 27 novembre 2013

37 பேர் சுட்டுக்கொலை நைஜீரியாவில்

நைஜீரியாவில் வடக்கு பகுதியில் முஸ்லிம்களும், தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இவர்கள் புலானி மற்றும் பெரூம் இனம் என்றழைக்கப்படுகின்றனர்.பிளாட்டியூ மாகாணத்தில் இந்த இரு பிரிவினரும் சம அளவில் இருப்பதால் இங்கு அடிக்கடி மத கலவரம் நடைபெறுகிறது. ஆயிரக் கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் பிளாட்டியூ மகாணத்தில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் 4 கிராமங்களில் ஒரு கும்பல் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியது. அதில் 37 பேர் பலியாகினர்.
அவர்களில் கது கபாங் கிராமத்தில் 13 பேரும், டாரனில் 8 பேரும், துல்கிராமத்தில் 9 பேரும், ராவுருவில் 7 பேரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் பெரூம் இனத்தை சேர்ந்தவர்கள்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் புலானி இனத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire