குருநாகல், தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய நகரங்களை கொழும்புடன் இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கு பணிகள் ஜனவரியில் ஆரம்பமாகுமென அமைச்சர் நிர்மல கொத்தலாவல நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார்.இந்த நெடுஞ்சாலை சீனாவின் நிதி உதவியுடன் மூன்று கட்;டங்களில் அமைக்கப்படுமென்றும் அவர் கூறினார். முதல் கட்டத்தில் கொழும்பு-கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை எதரமுல்லை, மீரிகம ஊடாக குருநாகலுடன் தொடுக்கப்படும், பின்னர் இது கண்டி, கட்டுகஸ்தோட்டைவரை கொண்டு செல்லப்படும்.இறுதிக்கட்டத்தில் இது தம்புள்ளையுடன் இணையும்.
தென் அதிவேக நெடுஞ்சாலை காலியிலிருந்து மாத்தறைவரை நீடிக்கப்படுவதுடன் இந்த நெடுஞ்சாலை ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்.
இந்த வீதி திறக்கப்படும் தினத்தில் நாம் இந்த வீதியை ஹம்பாந்தோட்டை வரை கொண்டு செல்லும் வேலையை தொடங்குவோமென செயத்திட்ட அமைச்சர் கொத்தலாவல கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire