mercredi 20 novembre 2013

லைக்காமொபைல் நிறுவனத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளை உடனடியாக விசரிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் டேவிட கமெரூன் தெரிவிப்பு

லைக்காமொபைல் நிறுவனத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளை உடனடியாக விசரிக்குமாறு பிரித்தானியப் பிரதமர் டேவிட கமெரூன் தெரிவித்துளார்.
பிரித்தானிய அரசிற்கு வரிகள் செலுத்தாது வரி மோசடிகள் செய்ததோடு அதனை ஈடுகட்டகோரி கட்சிக்கு £420000 கையூட்டை நன்கொடை என்று வழங்கியதையும் உடளடியாக விசாரிக்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பிரதமர் ஆணையிட்டுள்ளார்.
Huffington post பத்திரிகையக்குச் செவ்வி வழங்கிய தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் டொம் பிளெங்கின்சொப் “பிரதமர் தனது கட்சி £420000 பணத்தை இராஜபக்ச அரசுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள லைக்காமொபைல் வழங்கி உள்ளது.
இருப்பினும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சிறீலங்காவிற்குச் செல்வதைத் தவிர்த்திருந்தனர். இதையெல்லாம் தாண்டிப் பிரதமர் உடனடியான விசாரணைகளை லைக்காமொபைல் மீது மேற்கொள்ள வேண்டும்” எனத் தொரிவித்தள்ளார்.
லைக்கா குழுமத்தின் இராஜபக்ச குடும்பத்தினருடனான தொடர்புகளும் இராஜபக்ச குடுமபத்தினருடனான பணப்பரிமாற்றமும் பிரித்தானிய அரசால் வெளிக்கொணரப்படுமா?

Aucun commentaire:

Enregistrer un commentaire