lundi 11 novembre 2013

வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் குற்றம் சுமத்துகின்றவர்கள் தமது சாட்சியங்களை ஜெனீவாவில் அல்லது ஹேக்கில் சமர்ப்பிக்க வேண்டும். – கோத்தபாய

News Service
இலங்கைக்கு எதிராக பிரசாரங்களை பிரித்தானியாவில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தரப்பு பெரும் செலவில் முன்னெடுத்து வருவதாக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இந்த முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக கோத்தபாய குறிப்பிட்டுள்ளார். உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை என்பன இலங்கை மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமரை செல்லவேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன. இதேவேளை சனல்4 மூலம் இலங்கையில் போர்குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு குற்றம் சுமத்துகின்றவர்கள் தமது சாட்சியங்களை ஜெனீவாவில் அல்லது ஹேக்கில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்று கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire