jeudi 14 novembre 2013

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் இலங்கையில்;லீனா மணிமேகலை

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற மன நிலையை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை வான் கதைகள் ஆவணப்படத்தின் தயாரிப்பாளரும் நெறியாளருமான லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.
சனல 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தனக்கு எதிரானவர்களையும் மாற்று கொள்கைகளை கொண்டுள்ளவர்களை கடத்திச் செல்வதற்காக வெள்ளை வான்களை பயன்படுத்துகிறது.
விசாரணைக்காக கடத்திச் செல்லப்படுவோர் மீண்டும் திரும்புவதில்லை. கடத்திச் செல்லப்பட்டவர் மீண்டும் திரும்பினர் என்ற செய்திகள் இல்லை.
வெள்ளை வான்களில் வந்து விசாரணைக்காக கடத்தப்பட்டவர்கள் மீண்டும் திரும்ப போவதில்லை என்பதை அறிந்திருப்பார்கள்.
போர் முடிந்து விட்ட எனக் கூறிய போதும், பாதுகாப்பு நிலைமைகளால் அங்கு அச்சம், மன அழுத்தங்கள் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என லீனா மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire