samedi 2 novembre 2013

குமரன் நினைவுகள் - நினைவுப் பேருரை- உரையாடல் - போராட்ட வாழ்வும் வரலாற்றில் வாழ்தலும்


போராட்டத்தினுள் வாழும் மனிதர்கள் முதன்மையாக இழப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் . உச்சபட்சமாக உயிரை இழக்க நேரும். நிலவிய சமூகம் ஏற்படுத்தி வைத்த அறங்கள், ஒழுக்கங்கள், நியமங்கள், பொறுப்புக்கள் போன்றவற்றை இவர்கள் மீற நேரிடும். தவிர்க்கவியலாமல் வன்முறையை எதிர்கொள்ளவும், செலுத்தவும் நேரிடும். அனைத்துக்கும் மேலாக இலக்கை எய்தும் நோக்கில் தோல்வியை எதிர்கொள்ளவும் நேரிடும் .அப்போது தாம் இழந்தவையும் மீறியவையும் அர்த்தமுள்ளவைதானா என்கிற கேள்விகளை எதிர்கொள்ள நேரும். .அவ்வேளை உளச்சிதைவுக்கும் நம்பிக்கையின்மைக்கும் அவர்கள் உள்ளாகவும் நேரிடும். இதனையும் மீறித்தான் மனிதர்கள் தம் இருப்புக்கும் விடுதலைக்கும் போரிட்டபடியே இருக்கிறார்கள். இதுவே மனிதகுலத்தின் வரலாறு. ஈழப் போராட்டத்தினையிடையில் வாழ நேர்ந்த மனிதர்களின் வாழ்வும் இவ்வாறானதே . எனினும், இவர்களில் ஒரு சிலரே வரலாற்றில் வாழ்கிறார்கள். ஏன் அவ்வாறு நேர்கிறது என்பது குறித்து பார்வையாளர்கள் பங்குபெறும் உரையாடல் பிரதான உரையை அடுத்து இடம்பெறும். தோழர். குமரனுடன் வாழ்ந்த தோழர்களும் நண்பர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
 அனவரையும் அழைக்கும்
தோழர்களும் நண்பர்களும்
SALLE  SAINT  BRUNO
 9, RUE  SAINT  BRUNO
75018    PARIS
SAINT  BERNARD
தேவாலயம் அருகில்
Métro:  LA  CHAPELLE
தொடர்புகளுக்கு
06 19 45 02 76   
 06 23 60 72 65  
06 13 98 82 71 

Aucun commentaire:

Enregistrer un commentaire