lundi 19 mars 2012

13ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம்?

13ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா, இலங்கைக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியா இவ்வாறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு பகிர்வது தொடர்பிலான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை. இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்த வேண்டுமென இந்தியா மறைமுகமாக கோரி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire