samedi 31 mars 2012

அகிம்சை வாதிக்கு ஆயுதவாதிகளும் மரியாதை

மூத்த அறிஞர் தந்தை செல்வநாயகத்தின் 114 ஆவது ஜனன தின நிகழ்வு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில், எம்.பி.க்களான மாவை சோ.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் க.சிற்றம்பலம் எம்.பிக்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் மற்றும் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, றெமீடியஸ் (யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர்), இரா.சங்கையா (நிர்வாகச் செயலாளர்) த.வி. கூட்டணி ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ஏனைய கல்லூரிகளின் முதல்வர்கள் மாணவர்கள், அரச ஊழியர்கள் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தமிழர் விடுதலை கூட்டணி அன்புடன் அழைக்கின்றது என்று ஏற்பாட்டுக் குழு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire