jeudi 15 mars 2012

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர் தமிழர் எதிர்க்க வேண்டும் என்கிறார் ராஜேஸ்வரி சுப்பிரமணியம்!

அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டுமென லண்டனில் உள்ள டயஸ் போரா டயலொக் அமைப்பின் அங்கத்தவர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் கோரிக்கை விடுத்தார். இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வடபகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்காக அமெரிக்க அரசாங்கமோ, புலம்பெயர்ந்தவர்களோ உதவிகளை செய்வதற்கு முன்வரவில்லை. இவர்கள் தற்போது தமிழினத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். அமெரிக்க அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட வேண்டும். அமெரிக்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வரு கின்றது. அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாவது செய்யாமல் இருக்க வேண்டுமென ராஜேஸ்வரி சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட வேண்டும். அமெரிக்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வரு கின்றது. அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாவது செய்யாமல் இருக்க வேண்டுமென ராஜேஸ்வரி சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire