mercredi 21 mars 2012

யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் பெருமளவில் பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 85000 கணவரை இழந்துள்ளனர். மடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒர் கிராமத்தில் அதிகளவான பெணகள் பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக பெண் உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சில பெண்கள் தங்களது உடல்களை விற்று குழந்தைகளை பராமரித்து வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது. பெருமளவிலான பெண்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நட்டஈடுகளை இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல நாடுகளில் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்படுவதாக விழுது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் என்னும் நடவடிக்கை நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் மிக முக்கியமான பங்களிப்பை செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire