samedi 17 mars 2012

விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை

மட்டக்களப்பு நகரின் கூழாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்ற இத் தற்கொலை குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதி நடராஜா ராஜு (45) என்பவரே உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் அரசடி பிரதேசத்தைச் சோர்ந்த இவர் மட்டக்களப்பு பாடசாலை ஒன்றின் விஞ்ஞான பாட ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது. 4 பிள்ளைகளின் தந்தையான இவரது மரணம் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.வி.பெர்ணான்டோ மரண விசாரணையை மேற்கொண்டார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire