mardi 30 octobre 2012

ஜேர்மன் நாட்டில் 28 கிலோ கட்டி ஒன்றை மருத்துவர்கள் வெட்டி எடுத்துள்ளார்கள் !


ஜேர்மன் நாட்டில் உள்ள மருத்துவர்கள் பெரும் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு சுமார் 28 கிலே கிராம் எட்டையுள்ள கட்டியை நீக்கியுள்ளனர். இதுவரை காலமும் இவ்வளவு எடைகொண்ட கட்டி ஒன்று உடலில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதைவிட வேதனையான விடையம் என்னவென்றால், இந்தக் கட்டி தனது வயிற்றில் இருக்கிறது என்று தெரியாமலே ஒரு யுவதி வாழ்ந்துள்ளார். 60 வயதான இந்த யுவதி பலவருடங்களாக வாழ்ந்துள்ளார். சமீபத்திலேயே இக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் இதனை அகற்றியுள்ளனர்.

இந்தக் கட்டி வயிற்றில் இருப்பதை அறியாத மருத்துவர்கள், குறிப்பிட்ட யுவதி அபரிவிதமாக எடைபோடுவதாக நினைத்து, உடல் எடை குறைவதற்காக மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்கள். அத்தோடு நின்றுவிடாமல் அவர் உடல் எடையைக் குறைக்க, உணவுப் பழக்கவழக்கத்தையும் மாற்றுமாறு கூறியுள்ளனர். என்னத்தை தான் செய்தபோதிலும் அவர் எடை குறையவில்லையாம். இறுதியில் தான் மேட்டர் என்ன என்று கண்டுபிடித்துள்ளார்கள் மருத்துவர்கள்.

சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்த இந்த சத்திரசிகிச்சையில் இந்தக் கட்டியை மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருந்து எடுத்தபின்னர், இந்த யுவதி பழைய எடைக்கு திரும்பியுள்ளார். எனவே அபரிவிதமாக எடை அதிகரிப்பவர்கள், எல்லாவிதமான மருத்துவப் பரிசோதனைகளை எடுப்பது நல்லது. நீங்கள் எடை கூடியிருப்பது உடல் ரீதியாக இருக்க சிலவேளைகளில் வாய்ப்பு இல்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire