jeudi 25 octobre 2012

குடியுரிமை வழங்க நடமாடும் சேவை

தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன் போது உள்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால், இந்தியாவுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்பியவர்களுள் இலங்கை குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கவே இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. 

இதற்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் இதற்கு அனுசரனை வழங்குகிறது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire