samedi 27 octobre 2012

கெஹலிய கோரிக்கை அமெரிக்கா, இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்

news
அமெரிக்கா இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
இலங்கை ஈரானில் இருந்து மசகு எண்ணையினை இறக்குமதி செய்து வருகின்றது. 
 
ஆனாலும் தற்போது அமெரிக்கா அரசாங்கம் ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடையினால் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நட்பு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
அத்தடன் ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 
 
இதன் காரணமாக இலங்கை பாரியளவு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றது. 
 
இதனால் இலங்கைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கருத்திற் கொண்டு அமெரிக்க அரசாங்கம் நட்பு நாடுகள் பாதிக்காத வகையில் தடைகள் விதிக்கப்பட வேண்டும்.
 
அல்லது அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமெரிக்காவிடம் கோரிக்கையினையும் விடுத்துள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire