mardi 30 octobre 2012

தங்கத்துடன் கப்பல் மாயம் ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன்



ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன் 700 தொன் தங்கத்தை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுபிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்ய கப்பலொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. மேற்படி கப்பல், கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையுடன் ஒக்ஹொட்ஸ்க் கடலுக்கு கிழக்கில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹரானிலிருந்து ஒக்ஹொட்ஸ்க் கடலூடாக பெக்லிஸ்டோவ் தீவை நோக்கி இந்த கப்பல் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கப்பலில் உள்ள தங்கத்தின் பெறுமதி தொடர்பில் அறிவிக்க பொலிமெடல் சுரங்க நிறுவனம் மறுத்து வருகின்றது. இருப்பினும் வழமையாக பயணிக்கும் வழியிலேயே இம்முறையும் அந்த கப்பல் பயணித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன கப்பலைத் தேடுவதற்காக மூன்று கப்பல்கள், ஹெலிகொப்டர் மற்றும் கரையொதுக்கும் கப்பல் போன்றன அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் காணாமல் போன கப்பல் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் ஏற்பட்டுள்ள கடும் அலை சீற்றத்தால் கப்பலைத் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற் பகுதியில் சுமார் 13 அடி உயரத்துக்கு அலைகள் எழுவதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கப்பலிலுள்ள அதிகாரிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை உதவி கோரியுள்ள போதிலும் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில் இன்றைய தினமே கப்பல் காணாமல் போயுள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன.  

Aucun commentaire:

Enregistrer un commentaire