samedi 27 octobre 2012

இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பம் மன்னாரில்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரசூல் புதுவெளி கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கென 47 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நிலையில் குறித்த கிராமத்தில் வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிக்குமுகமாக இன்று 3 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வைபவரீதியாக இடம்பெற்றது.

இதன் போது நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரையா, நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட், மன்னார் செஞ்சிலுவைச்சங்கத்தின் உப தலைவர் பி.ஜேறோம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மூன்று வீடுகளுக்கும் வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire