mercredi 31 octobre 2012

60 மில்லியன் டொலர் நிதியுதவி சவூதி



வீதி அபிவிருத்திக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபிய அரசாங்கம இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக வழங்கியுள்ளது.

சவூதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாபின் இலங்கை விஜயத்தின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அரேபிய நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போதே இந்நிதியுதவி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பதந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதில் சவூதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான
போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் கையொழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர் நிர்மல் கொத்தலாவல, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire