dimanche 21 octobre 2012

கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டலொன்றை பாசிக்குடாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை திறந்து வைத்தார்.

பாசிக்குடா பகுதியில் 150 ஏக்கர் விசாலத்தில் அமையவுள்ள 14 ஹோட்டல்களின் முதற்கட்டமாக 48 அறைகளைக்கொண்ட முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்த வைக்கப்பட்டது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த ஹோட்டல்கள் நிர்வகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்தில் 854,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வருடத்தில் இந்த எண்ணிக்கை 950,000ஐ எட்டுமென நம்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire