
இருப்பினும் அவரை இந்தியாவுக்கு நாடுகடத்தவேண்டும், என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இதனை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. தற்போது இலங்கை அரசு சீனாவுடன் தனது உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் , இலங்கை அரசை அச்சுறுத்த சில செய்திகள் அவ்வப்போது இந்தியாவில் இருந்து வெளிவருவது சகஜம். அதுபோலவே இந்தியா விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவுள்ளது என்ற செய்தியும் வெளியாகியிருந்தது. ஆனால் இச் செய்தி வெளியாகிய சில மணி நேரங்களில், கே.பி மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை, அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபடலாம் என்று இலங்கை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire