dimanche 28 octobre 2012

நடு ரோட்டில் நின்று காதலிக்காக துப்பாக்கி வேட்டுகளை தீர்த்த முன் நாள் புலிகள் உறுப்பினர் !


காதலியுடன் தன்னை சேர்ச்து வைக்க கோரி துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த இளைஞரொருவர் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.வறணிப்பகுதியில் வறணி மகா வித்தியாலம் முன்பதாக நேற்றைய தினம் குறித்த நபர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியவாறு வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்த வண்ணமிருந்த வேளை படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் கொடிகாமம் பொலிஸார் வசம் கையளிக்கப்பட்டிருந்தார்.பொதுமகனான குறித்த நபர் வசம் எவ்வாறு துப்பாக்கி வந்து சேர்ந்ததென்பது தொடர்பினில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பினில் மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞயன் யுவதியொருத்தியை காதலித்து வந்திருந்த நிலையில் யுவதியின் பெற்றோர் அதற்கு மறுத்து வந்திருந்தனர்.அத்துடன் குறித்த யுவதியினை மறைத்து வைத்தவாறு தகவல்களை வழங்கவும் மறுத்து வந்துள்ளனர்.இதனால் சீற்றமுற்ற குறித்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி சகிதம் யுவதியினது குடும்பத்தவர்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளார். அவ்வேளையிலேயே அவர்களை மிரட்ட துப்பாக்கியினால் வேட்டுக்களையும் அவர் தீர்த்துள்ளார்.

எனினும் நடுவீதியில் வைத்து துப்பாக்கியினால் ஆட்களை அவர் மிரட்ட முற்பட்ட வேளை அச்சமடைந்த பொதுமக்கள் படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.குறித்த நபர் விடுதலைப்புலிகளது முன்னாள் போராளியெனவும் அவர் பதுக்கி வைத்த துப்பாக்கியினாலேயே எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாகவும் பொலிஸ் தரப்பினால் கூறப்படுகின்றது.இதே வேளை அவரது மனநிலை தொடர்பில் வைத்திய நிபுணர்களது அறிக்கையினை பெற பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire