mercredi 17 avril 2013

வெளிநாடுகளில் உள்ள 200 தமிழர்களின் சொத்துக்களை விடுதலைப்புலிகள் கையகப்படுத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கில் காணி அலுவலகங்களில் இருந்த அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளில் ஆவணங்களை அழித்து விட்டு, அந்த காணிகளை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அந்த சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

   எந்த உரிமையும் இல்லாத புலிகளின் குடும்பங்கள் அந்த காணிகளுக்கு உரிமை கோரி வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதேவேளை வெளிநாடுகளில் உள்ள 200 தமிழர்களின் சொத்துக்களை விடுதலைப்புலிகள் கையகப்படுத்தியிருந்தனர். அண்மையில் வட பகுதிக்கு சென்ற வெளிநாட்டில் உள்ள ஒருவர், தமது காணி புலிகளுக்கு ஆதரவு வழங்கிய குடும்பம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது. 

   அதேவேளை கொழும்பில் கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவருக்கு சொந்தமான யாழ்ப்பாணத்தில் உள்ள பரம்பரை வீடும் புலிகளினால் கைப்பற்றப்பட்டதாக உறவினர்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire