vendredi 19 avril 2013

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோதல் 9 மாவோயிஸ்ட்டுக்கள் பலி


இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த மோதல் ஒன்றில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 9 பேரை தாம் கொன்றதாக இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடர்ந்த காட்டுப் பகுதி ஒன்றில் ரோந்து சென்றவேளை மாவோயிஸ்ட்டுக்களின் மறைவிடம் ஒன்றில் தேடுதல் நடத்த முனைந்த பொலிஸார் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே இந்த மோதல் ஏற்பட்டதாக ஒரு உள்ளூர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெரும்பாலும் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட்டுகள் செயற்படுகிறார்கள்.
ஏழைகளின் உரிமைகளுக்காக தாம் போராடுவதாக மாவோயிஸ்ட் தலைவர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா எதிர்கொள்கின்ற மிகப்பெரிய உள்ளக பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாவோயிஸ்டுகள் திகழ்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire