dimanche 21 avril 2013

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு நான் பக்கபலமாக நிற்பேன்! - சோபித்த தேரர்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளிக்கின்ற பொது அபேட்சகர் ஒருவருக்கு தன்னுடைய பூரண ஆதரவை வழங்குவேன் என்றும், எதிர்க்கட்சியின் பொது அபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலில் தான் ஒருபோதும் நிற்கப்போவதில்லை என்றும் மாதுலுவாவேசோபித்த தேரர் குறிப்பிடுகிறார்.

இந்த முறையை இல்லாதொழிப்பதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர்கள் பலர் ஒத்துழைப்பு நல்க முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்ற தேரர், அந்தப் பிரதியமைச்சர்களுடனான கலந்துரையாடல் தமக்குப் பூரண திருப்தியளித்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire