mardi 23 avril 2013

எல்.ரீ.ரீ.ஈயின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கவில்லை


sambanthansurendranஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தின் கழுத்து மெதுவாக ஆனால் உறுதியாக நசுக்கப்பட்டு வருகிறது, அரசாங்கத்தை விமர்சிக்கும் பலர், குறிப்பாக ஊடகங்கள் ஒரு சோகமான விதியை சந்தித்து வருகின்றன என்பது மறுக்கமுடியாததாக உள்ளது. சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் யாவும் வடக்கிலுள்ள தமிழர்கள் மீது அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டவை என்று தேனொழுகப் பேசி வருகிறார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள்மீது சம்பந்தன் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த குற்றச்சாட்டுகளில் ஏதாவது ஒன்றாவது முற்றிலும் கட்டுக்கதையாக இருக்கும் என்று பரிந்துரைப்பதுகூட முற்றிலும் நம்பமுடியாததாக இருக்கிறது. எனினும் எதிராளிகளை உடல்ரீதியாக தாக்கும் பழக்கம் வடக்கிலுள்ள அரசாங்கத்தின் தமிழ் எதிராளிகளுக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இத்தகைய தாக்குதல்கள் நாட்டின் இதர பாகங்களிலுள்ள சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதும் நடத்தப்பட்டுள்ளன. ஒன்றில் சம்பந்தன் அல்லது சுரேந்திரன் நடைபெற்றதாக புலம்பும் விடயங்களில் உண்மையான அல்லது நேர்மையான ஏதாவது தடயங்கள் வைத்திருப்பார்களானால், ஒருவர் இயற்கையாகவே எதிர்பார்க்ககூடியது, அவர்கள் பாதகமான கருத்துக்களை வெளியிடுவதுபோல, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களையும் நிறுத்தும்படி குரல் கொடுத்திருக்க வேண்டும்.
எனினும் அவர்கள் அப்படி செய்யாதது மட்டுமல்ல, ஒன்றில் சம்பந்தன் அல்லது சுரேந்திரன் ஆகியோரில் ஒருவர்கூட எல்.ரீ.ரீ.ஈ மேற்கொண்ட அட்டூழியங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட மூச்சு விடவில்லை. அப்படிச் செய்வது உண்மையில் அவர்களது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. உத்தேச உலகத் தமிழ் பேரவை (ஜி.ரி.எப்) எல்.ரீ.ரீ.ஈ யின் வழித்தோன்றல்கள் அல்லது அதன் வாரிசாக இருப்பதுற்கு முயற்சி செய்யும் ஒரு வதந்தி கிளப்பும் அமைப்பாகும், அதேவேளை ரி.என்.ஏ மற்றும் அதன் அங்கங்களான இலங்கை தமிழரசுக் கட்சி(ஐ.ரி.கே.ஏ), ஈபிஆர்எல்எப் (சுரேஸ்), புளொட், மற்றும் ரெலோ போன்ற கட்சிகள் கொண்டிருக்கும் நபர்கள், அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ ஆனால் எல்.ரீ.ரீ.ஈ தான் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை உண்மையில் ஏற்றுக்கொள்ளும் முறையற்ற கருத்தினைக் கொண்டவர்களாக உள்ளார்கள், மற்றும் இதன் காரணமாக சம்பந்தன் மற்றும் மோசடிகளில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமல்லாது, ஆனால் அவர்களைப் போலல்லாது கண்ணியம், சுயமரியாதை என்பனவற்றை கொண்ட சட்டத்தை மதிக்கும் ஒழுங்கான தமிழர்கள் எல்லோருமே அதை பின்பற்றுகிறார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களை தொடர்ச்சியாக தாக்கிவந்துள்ளது. மற்றும் சகல இனம், பால் ,வயது என்பனவற்றை சேர்ந்த அனைவரும் அவர்களால் கொல்லப்பட்டவர்களில் அடங்குவார்கள். சம்பந்தன் மற்றும் ரி.என்.ஏ, அதேபோல சுரேந்திரன் மற்றும் இன்னும் பிறக்காத ஜி.ரி.எப் இனை சேர்ந்த, அதன் ஏனைய அங்கத்தவர்கள் ஆகிய அனைவரும் இது விடயத்தில் பெரும் மௌனத்தை கடைப்பிடித்தார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் அட்டூழியங்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு முறையான கணக்கெடுப்பு நடத்தப்படுமாக இருந்தால், அநேகமாக அவர்களால் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை போராட்டத்தில் அயுதப்படையினரால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட அதிகமாக இருக்கும். இந்த விடயங்கள்தான் சம்பந்தன் மற்றும் ரி.என்.ஏ, அதேபோல சுரேந்திரன் மற்றும் இன்னும் பிறக்காத ஜி.ரி.எப் இனை சேர்ந்த அதன் ஏனைய அங்கத்தவர்கள் ஆகிய அனைவரையும் ஊமையாக்கியுள்ளது, அவர்கள் தங்களது பிழைப்புக்கு முக்கியமான எல்.ரீ.ரீ.ஈ யை எந்தக் காரணத்துக்காகவும் தாக்குவதற்கு தைரியமோ அல்லது கவலையோ கொள்ளமாட்டார்கள்.Mullivaikal-6
எல்.ரீ.ரீ.ஈயினால் நிகழ்த்தப்பட்ட இறுதியான அட்டூழியம் யுத்தத்தின் கடைசி நாட்களில்தான் நடத்தப்பட்டது, அந்தச் சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் நடத்தை காரணமாக சகல வயதையும் மற்றும் பாலையும் சேர்ந்த தமிழ் பொதுமக்கள் அனைவரையும் பணயக் கைதிகளாக பிடித்து முல்லைத்தீவின் ஒரு சிறிய துண்டு நிலத்தினுள் அடைத்து வைத்து, அதேவேளை ஸ்ரீலங்கா இராணுவம் அவர்கள்மீது நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக அந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்களுக்காக இப்போது சம்பந்தன் மற்றும் சுரேந்திரன்  ஆகியோர் தேனொழுகப் பேசி, தங்கள் தவிப்பையும் புலம்பலையும் வெளிப்படுத்துகிறார்கள். இருந்தும் சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் புலிகளின் இந்த அட்டூழியம் அதன் அளவில் மிகப்பெரியதாக இருந்தும்கூட ஆழ்ந்த மௌனத்தை கடைப்பிடிக்கிறார்கள் (அல்லது ஜெயலலிதாவை போல்). இதுவும் மற்றும் சில முக்கியமான சில விடயங்களைப்போல சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் மௌனம் காக்கும் ஒரு விடயமாகும். அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ தமிழ் சிறுவர்களை கடத்திய போதும், மற்றும் வயதுவந்த தமிழர்களைக் கடத்திச்சென்று கப்பம் பெறுவதற்காக அவர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்தது அல்லது அடிமைத் தொழிலாளர்களாக அதன் பயங்கரவாத அங்கத்தவர்களுடன் சேர்த்தபோதும், அதேவேளை எல்.ரீ.ரீ.ஈ உத்தேச வரிகளை மக்கள்மீது திணித்து அவர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு தேடிய பணத்தை கப்பமாக அறவிட்டபோதும் இந்த சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இருவரும் மௌனமாகவே இருந்தனர்.
அவர்கள் ஒன்றில் நடப்பதை சரி என்று ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் (இதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது), அல்லது எல்.ரீ.ரீ.ஈக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பு குரல்களை எழுப்புவதற்கும் அவர்கள் மிகவும் பயந்திருக்க வேண்டும். எனினும் எல்.ரீ.ரீ.ஈ மீதிருந்த அத்தகைய மரண பயம் காரணமாக தமிழ் மக்களுக்கு அவர்கள் புரிந்த இத்தகைய தவறான அட்டூழியங்களையும் பார்த்து மௌனமாக இருந்த இவர்களுக்கு, சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ ராஜபக்ஸ அரசாங்கத்துக்கும் மற்றும் எங்கள் ஆயுதப்படையினருக்கும் எதிராக கடுமையான பொது விமர்சனங்களில் ஈடுபடுவதற்கு மனச்சாட்சி என்ற ஒன்று இடம் தராது. இது விசித்திரமானதாக உள்ளது அல்லவா?
இந்த விடயங்களுக்கு அப்பால் சம்பந்தன் மற்றும் சுரேந்திரன் ஆகியோரால், அரசாங்கம் மற்றும் எங்களது ஆயுதப்படையினர் ஆயுத மோதல் நடைபெற்ற இருண்ட காலகட்டத்தில் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை குறித்து எந்தவிதமான வழியிலாவது பாராட்டுகளை தெரிவிக்கவில்லை .இது எல்.ரீ.ரீ.ஈ யானது வட மாகாணத்தின் பெரும்பகுதியையும் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளையும் தனது நடைமுறை கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த காலகட்டம். இருந்தும் ஸ்ரீலங்கா அரசாங்கம் மக்களின் நிதியை (அது குறிப்பாக சிங்கள மக்களின் நிதியை) கொண்டு உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் அந்தப் பகுதியில் வாழும் தனது குடிமக்களுக்கு வழங்கியது, அந்தப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகளை இயங்க வைத்து அதற்கு தேவையான மருந்துகளையும் மற்றும் உபகரணங்களையும் வழங்கி அரசாங்கத்துக்கு எதிராக நடத்தப்படும் போரில் காயமுற்றவர்கள் உட்பட நோயாளிகளுக்கும் காயமுற்றவர்களுக்கும் சிகிச்சை வழங்கியது.
ஸ்ரீலங்கா அரசாங்கம்தான்  அந்தப்பகுதிகளில் நிலைகொண்டிருந்த மருதmullivaikal3்துவ அலுவலர்களுக்கான வேதனத்தை வழங்கியது, மற்றும்; அந்தப் பகுதியில் வேலை செய்த வெளிநாட்டவர்களிலிருந்து அங்கு கடமையாற்றிய வைத்தியர்களுக்கு தனது சொந்தப்பணத்தில் அரசாங்கம் பயிற்சிகளை வழங்கியுள்ளது. அந்தக் காலகட்டம் முழுவதும் அந்தப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசாங்க திணைக்களங்கள் யாவும் இயங்குவதற்கு வழி செய்யப்பட்டிருந்தன, மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதையும் ஸ்ரீலங்கா அரசாங்கமே வழங்கியது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மேற்பார்வையின்கீழ் பொதுப் பரீட்சைகள் நடத்தப் பட்டதுடன் மற்றும் நோய் தடுப்பு பிரச்சாரங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் நடத்தப்பட்டதை போல வடமாகாணம் முழுவதும் நடத்தப்பட்டது, இவையாவும் அந்தப் பிரதேசங்கள் எல்.ரீ.ரீ.ஈயின் இரும்புப்பிடியின் கீழ் இருக்கும்போதே நடத்தப்பட்டன. இவை யாவும் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளின் சட்டவிரோத கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பிரதேசங்களுக்கு அரசாங்கம் ஆற்றிய சேவைகள் ஆகும்.
 சம்பந்தன் அல்லது சுரேந்திரன் அல்லது அவர்களைப் போலுள்ள யாராவது அப்படியான  உதவிகள் எதையாயாவது செய்திருந்தால் என்ன உதவிகளைச் செய்துள்ளார்கள் என்று யாராவது கேட்கலாம்? அவர்கள் நம்பிக்கையற்ற, வெட்கம்கெட்ட, ஏமாற்றுக்காரர்கள், அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை ஆனால் தமிழ் மக்களின் கண்ணீரில் தங்களை பலப்படுத்திக் கொண்டவர்கள். இந்த மோசடிக்காரர்களின், ஏமாற்று வேலைகள் அல்லது அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் வற்புறுத்தல் மூலமாக அல்லது வேறுவழியிலோ தங்கள் பணத்தின் ஒரு பகுதி மூலம் புலிகளின் பொக்கிஷத்தை நிறைக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். இந்த பங்களிப்புகள் ரி.என்.ஏ யின் பதவிகளிலுள்ள சம்பந்தன் குழுவினரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு உதவியதுடன் பல சந்தர்ப்பங்களில் தமிழ் புலம்பெயர் சமூகம் என அழைக்கப்படும் அமைப்புகளை பிரபலமாக்கவும் உதவியது.
எனவே அந்த நாட்களில் நாங்கள் அதிகம் கேட்டிராத சுரேந்தினும், அதேபோன்ற மற்றவர்களும், ஏழைகளும் மற்றும் எளிதில் ஏமாறக்கூடியவாகளுமான தமிழர்களின் பணத்தை கொண்டு வெளிநாட்டு காலநிலைக்கு ஏற்ற உல்லாச சுகபோகங்களை அனுபவிக்கலானார்கள். சுரேந்திரன் போன்றவர்கள் வெளிநாட்டு சூழலில் வாழும் எளிதில் ஏமாறக்கூடிய தமிழர்களின் கடின உழைப்பில் பெறப்பட்ட பணத்தில் எப்படி தின்று கொழுத்துள்ளார்கள் என்பதை பாராட்டத் தக்கவிதத்தில் பேராசிரியர் ரட்னஜீவன் ஹ_ல் அவர்கள் எழதியுள்ள ‘நாடு கடந்தவர்களின் திரும்புதல் அல்லது திரும்பிவந்த நாடுகடந்தவர்கள்’ எனும் தலைப்பிலான புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார், அந்த அற்புதமான புத்தகத்தை ஒருவர் கட்டாயம்; படிக்க வேண்டும்.
இறுதியாக சம்பந்தன் அல்லது சுரேந்திரன் அல்லது அவர்களின் கூட்டத்திலுள்ள எவராவது முல்லைத்தீவில் அகப்பட்டிருந்த தமிழர்களை விடுவித்தார்களா அல்லது சம்பந்தன் அல்லது சுரேந்திரன் அல்லது அவர்களின் கூட்டத்திலுள்ள எவராவது தமிழ் சிறுவர்கள் கடத்தப்படும்போது, அல்லது அதேபோல பிராயமான தமிழர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் கடத்தப்பட்டு அவர்களது கடின உழைப்பினால் தேடிய பணத்தை எல்.ரீ.ரீ.ஈ கப்பமாக அறவிட்டபோது, அதை தடுத்து அவர்களைக் காப்பாற்றினார்களா. ஸ்ரீலங்காவின் ஆயுதப்படையினர்தான் தங்கள் உயிர்களையும் உடல் அவயங்களையும் கட்டுப்பாடற்ற வகையில் தியாகம் செய்து வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு இந்த நினைவுச்சின்னமாக நிலைத்து நிற்கும் சேவையை புரிந்துள்ளார்கள். இந்த நன்றிகெட்ட தன்மை நிச்சயமாக முன்னெப்போதும் கண்டிராத ஒன்று, தமிழர்களுக்கு அவர்களின் கடைசி மணி நேரத்தில் தேவையான நேரடி உதவிகளைக்கூட இந்த இந்த சிறப்புமிக்க மோசடிக்காரர்கள் போதுமானளவு செய்யவில்லை, எனவே வெட்கமில்லாமல் கடுமையான கோரிக்கைகளை எல்.ரீ.ரீ.ஈயினர் புரிந்த பலவிதமான அக்கிரமங்களிலிருந்தும் வடபகுதியிலிருந்து தமிழ் மக்களை மீட்க மட்டுமே செய்த எங்கள் ஆயுதப் படையினரின்மீது சுமத்துகிறார்கள், - இதிலிருந்து ஊகிக்கக்கூடியது என்னவென்றால் தமிழர்களின் துன்பங்களிலிருந்து ஒரு நல்ல வாழ்க்கையை தமிழர்களுக்கு அமைத்துக்கொடுக்க அவர்கள் இதுவரை ஒன்றும் செய்யவில்லை, அது தொடர்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள், அந்த துன்பங்கள் முடிவதை அவர்கள் விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் அதை வெளிப்படையாக செய்வதால் அரசியல் ரீதியாக அவர்கள் எவ்வளவு பொருத்தமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது  அப்பட்டமாகத் தெரிகிறது.
அந்த இருண்ட நாட்களிலிருந்து இன்றைய நாட்களுக்கு வருவதில், சம்பந்தன் மற்றும் அவரது குழுவினர் அல்லது சுரேந்திரன் மற்றும் அவரது குழுவினர் பொருள் அடிப்படையில் மற்றும் பொதுவாக தமிழர்கள் அதுவும் குறிப்பாக வடபகுதி தமிழர்கள் என்கிற உறுதியான வகையில் நிலைக்ககூடிய என்ன செய்துள்ளார்கள்? இதற்கு மிகவும் குறிப்பிடத்தக்க உதாரணமாக எழுவது, இந்தத் தமிழர்களுக்கு, தென்னிந்தியத் தமிழர்களால் குறிப்பிடத்தக்க வகையில் அவர்களது மீனவர்களால் தொடர்ச்சியாக ஏற்படும் இடையூறுகள்தான்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் மீன்பிடி ஒரு பிரதான தொழில் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரதேசங்களை சுற்றியுள்ள நீரில் மீன்கள் நிறைந்துள்ளன, அங்குள்ள எளிய தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள், மீன்பிடிப்பதை  தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்தவும் மற்றும் இந்த நாட்டிலுள்ள முழு மக்களுக்கும் கட்டுப்படியான விலையில் மீன்களை வழங்கவும் அவை உதவியாக உள்ளன. எனினும் அந்த பிடி, தென்னிந்தியாவை சேர்ந்த தமிழ் மீனவர்களால் சோனியா காந்தி, மன்மோகன்சிங், ஜெயலலிதா, மற்றும் கருணாநிதி ஆகியோர்களின் ஆசீர்வாதத்துடன் தொடர்ச்சியான அடிப்படையில் திருடப்பட்டு வருகின்றன, இந்த எளிய மீனவர்களின் மீன்களை தண்டனை எதுவும் இல்லாது திருடிச்செல்வது காரணமாக ஸ்ரீலங்காவிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களின் வாழ்வாதரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.
சம்பந்தன் அல்லது சுரேந்திரன் மற்றும் அவர்களைப் போன்றவர்கள் தென்னிந்தியாவின் தமிழ் மீனவர்கள் புரியும் இந்த மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் குறித்து  அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் அரசியல் ஆதரவு குறித்து எப்பொழுதாவது ஒரு சிறிய சிணுங்கலையாவது வெளிப்படுத்தியிருப்பார்களா? இன்று அவர்களது முதலமைச்சர் ஜெயலலிதா, இந்திய மீனவர்கள் எங்கள்  எல்லைக்குள் இருக்கும் நீருக்குள் அத்துமீறிப் பிரவேசித்து எங்கள் உணவை திருடிச் செல்வதை தடுத்து எங்கள் கடற்படையினர் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆக்கிரமிப்பு நடவடிக்கை எனக் குற்றம் சாட்டுகிறார். உண்மையில் இந்த நடிகை யதார்த்த வாழ்க்கையின் உண்மைகளைப் பற்றி அறியாமலிருக்கிறார்.
எங்கள் கடல் எல்லை எங்கள் நிலத்தை போலவே எங்களது எல்லையாகும், இந்தியனோ, சீனனோ, அவுஸ்திரேலியனோ அல்லது அமெரிக்கனோ,
யாராக இருந்தாலும் எந்த வெளிநாட்டவருக்கும் எங்கள் கடல் எல்லைக்குள்ளேயோ அல்லது எங்கள் நிலத்துக்குள்ளேயோ ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எழுத்து மூலமான அனுமதி இன்றி,வழக்கமாக அது ஒரு கடவுச்சீட்டில் விசா வடிவத்தில் வழங்கப்படும,; அதை தவிர வேறு எந்தக் காரணத்தைக் கொண்டும் அடியெடுத்து வைப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. இந்த மீன் கொள்ளையர்கள் எவரிடமும் விசா கிடையாது என்பதை யாரும் மறுக்கமுடியாது. எங்கள் கடல் எல்லைக்குள் அவர்கள் மீன்பிடிக்கும் அவர்களது நடத்தை,  ஒரு கொள்ளைக்கூட்டத்தினர் மற்றொருவருடைய வீட்டுக்குள் புகுந்து அவரது பொருட்களைக் கொள்ளையடிப்பதற்குச் சமனானது,
மற்றும் அந்த வீட்டைக் கொள்ளையடிப்பவர்களைப் போலல்லாது இந்த மீன் கொள்ளைக்காரர்களுக்கு சோனியா காந்தி, மன்மோகன்சிங், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருடைய ஆதரவு உள்ளது, எங்கள் மீனைக் கொள்ளையடிக்கும் இந்த திருடர்கள் அத்தகைய அதிகாரசக்திகளின் பின்துணையை பெற்றுள்ளார்கள். அவர்கள் ஸ்ரீலங்காவின் மீன்களை களவாடி வடக்கு மற்றும் கிழக்கினை சேர்ந்த எளிய தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். சம்பந்தன் மற்றும் சுரேந்திரன், ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் சிசன், சர்வதேச மனித உரிமை பேரவையை சேர்ந்த நவி பிள்ளை ஆகியோர் உட்பட மற்றும் பலரும் இந்த விடயத்தில் ஏன் மௌனமாக உள்ளார்கள்? இந்தியாவை எதிர்ப்பதற்கு அவர்கள் அஞ்சுகிறார்களா? அது அப்படித்தான் என்று தோன்றுகிறது. அதன்படி இதுபோன்ற முற்றிலும் கறைபடிந்த சக்திகளிடமிருந்து வெளிவரும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு எத்தகைய கனம் மற்றும் தீவிரம் என்பனவற்றை ஒருவர் செலுத்த முடியும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Aucun commentaire:

Enregistrer un commentaire