mercredi 3 avril 2013

இனவாத அல்லது மதவாத உணர்வுகளைத் தூண்டக் கூடிய செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது ;

இலங்கையில் மட்டுமே பூரண மதச்சுதந்திரம் காணப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எமது நாடு ஓர் ஜனநாயக நாடு எனவும், சகலருக்கும் பூரண மதச் சுதந்திரம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தை பாதுகாப்பதன் மூலம் மட்டுமன்றி பௌத்தர்களின் நடவடிக்கைகள் ஏனைய மதத்தவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தக் காத்திருப்போருக்கு விரலை நீட்ட அனுமதிக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் செய்யும் அனைத்து நடவடிக் கைகளின் மூலமும் சிறந்த முன்னுதாரணங்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு மிகவும் பொருத்தமானது எதுவென்பதனை அறிந்து அதன்படியே பௌத்த பிக்குகள் கடமையாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை அழிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் பௌத்த பிக்குகள் செயற்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தவறிழைத்தால் அதனை மஹா சங்கத்தினர் சுட்டிக்காட்ட வேண்டும் அந்தப் பொறுப்பு இன்றைய பௌத்த பிக்குகளுக்கும் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அதனை ஏற்றுக்கொள்ள எப்போதும் விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இனவாத அல்லது மதவாத உணர்வுகளைத் தூண்டக் கூடிய செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire