mercredi 17 avril 2013

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 5 மில்லியன் ரூபா வருமானம்


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 12 மணித்தியாலங்களில் ஐந்து மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது நேற்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 7 மணி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
குறித்த 12 மணித்தியால காலப்பகுதியில் 18,300 வாகனங்கள் குறித்த அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire